50 Bible Quiz Questions from Matthew 11 & 12 in Tamil | வேதாகம வினாடி வினா
50 Bible Quiz Questions from Matthew 11 & 12 in Tamil | வேதாகம வினாடி வினா
______________________________________________
கேள்வி 1
வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி யாருடையது ?
விடை : யோவான்
______________________________________________
கேள்வி 2
எதைப்பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள் என்று ஜனங்களிடம் கேட்டது யார் ?
விடை : இயேசு
______________________________________________
கேள்வி 3
நாணல் எதினால் அசையும் ?
விடை : காற்றினால்
______________________________________________
கேள்வி 4
மெல்லிய வஸ்திரம் தரித்திருக்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
விடை : அரசர் மாளிகைகளில்
______________________________________________
கேள்வி 5
தீர்க்கதரிசியிலும் மேன்மையானவன் யார் ?
விடை : யோவான்
______________________________________________
கேள்வி 6
யாரிடத்தில் பிறந்தவர்களில் யோவான் பெரியவன் ?
விடை : ஸ்திரீகளிடத்தில்
______________________________________________
கேள்வி 7
பலவந்தம் பண்ணுகிறவர்கள் எதைப் பிடித்துக் கொள்கிறார்கள் ?
விடை : பரலோகராஜ்யம்
______________________________________________
கேள்வி 8
யோவானை இயேசு யார் என்று அடையாளப்படுத்தினார் ?
விடை : வருகிறவனாகிய எலியா
______________________________________________
கேள்வி 9
கேட்கிறதற்கு _________ கேட்க கடவன்
விடை : காதுள்ளவன்
______________________________________________
கேள்வி 10
இயேசு சந்ததியாரை யாரோடு ஒப்பிட்டார் ?
விடை : குறைகூறுகிற பிள்ளைகளோடு
______________________________________________
கேள்வி 11
போஜனபானம் பண்ணாதவனாய் வந்தது யார் ?
விடை : யோவான்
______________________________________________
கேள்வி 12
போஜனபிரியனும் மது பிரியானுமான மனுஷன் என்று யாரை குறை கூறினார் ?
விடை : இயேசுவை
______________________________________________
கேள்வி 13
ஞானமானது யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் ?
விடை : அதன் பிள்ளைகளால்
______________________________________________
கேள்வி 14
எந்த பட்டணங்களை இயேசு கடிந்து கொண்டார் ?
விடை : கோரேசின், பெத்சாயிதா
______________________________________________
கேள்வி 15
பலத்த செய்கைகள் எங்கு செய்யப்பட்டிருந்தால் மனம் திரும்பி இருப்பார்கள் என்று இயேசு சொன்னார் ?
விடை : தீரு, சீதோன்
______________________________________________
கேள்வி 16
பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவது எது ?
விடை : கப்பர்நாகூம்
______________________________________________
கேள்வி 17
எது பிதாவினால் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்று இயேசு சொன்னார் ?
விடை : சகலமும்
______________________________________________
கேள்வி 18
யாருக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு சொன்னார் ?
விடை : வருத்தப்பட்டு பாரம் சுமப்பவருக்கு
______________________________________________
கேள்வி 19
நான் சாந்தமும் _________மாய் இருக்கிறேன்
விடை : மனத்தாழ்மையுமாய்
______________________________________________
கேள்வி 20
எது மெதுவாயும் எது இலகுவாயும் இருக்கிறது என்றார் ?
விடை : நுகம், சுமை
______________________________________________
கேள்வி 21
எதன் வழி போனபோது சீடர்கள் பசியாய் இருந்தார்கள் ?
விடை : பயிர் வழியே
______________________________________________
கேள்வி 22
ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிகத்தகாதது எது ?
விடை : தேவ சமூகத்து அப்பங்கள்
______________________________________________
கேள்வி 23
ஆசாரியர்களின் தேவ சமூகத்து அப்பத்தை புசித்தது யார் யார் ?
விடை : தாவீதும் அவனோடிருந்தவர்களும்
______________________________________________
கேள்வி 24
ஓய்வு நாளில் தேவாலயத்தில் ஓய்ந்திராதது யார் ?
விடை : ஆசாரியர்கள்
______________________________________________
கேள்வி 25
ஆசாரியர்கள் ஓய்வுநாளில் வேலைசெய்தாலும் குற்றமில்லாதவர்கள் என்று கூறுவது எது ?
விடை : வேத வாக்கியம்
______________________________________________
கேள்வி 26
தேவாலயத்திலும் பெரியவர் யார் ?
விடை : இயேசு
______________________________________________
கேள்வி 27
ஓய்வுநாளுக்கு ஆண்டவராய் இருக்கிறது யார் ?
விடை : மனுஷகுமாரன்
______________________________________________
கேள்வி 28
சூம்பின கையுடைய மனுஷன் எங்கே இருந்தான் ?
விடை : ஜெப ஆலயத்தில்
______________________________________________
கேள்வி 29
ஆட்டைப் பார்க்கிலும் விசேஷித்தவன் யார் ?
விடை : மனுஷனானவன்
______________________________________________
கேள்வி 30
கையை நீட்டி சொஸ்தமானது யார் ?
விடை : சூம்பின கையுடையவன்
______________________________________________
கேள்வி 31
இயேசுவை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினது யார் ?
விடை : பரிசேயர்
______________________________________________
கேள்வி 32
எதுவரைக்கும் நெரிந்த நாணலை முறிக்காமல் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் ?
விடை : நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கும் வரை
______________________________________________
கேள்வி 33
தாவீதின் குமாரன் இவர்தானோ என்றது யார் ?
விடை : ஜனங்கள்
______________________________________________
கேள்வி 34
பிசாசுகளின் தலைவன் யார் ?
விடை : பெயல்செபூ
______________________________________________
கேள்வி 35
தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எது நிலைநிற்கமாட்டாது ?
விடை : பட்டணமும், வீடும்
______________________________________________
கேள்வி 36
இயேசு எதனாலே பிசாசுகளை துரத்தினார் ?
விடை : தேவனுடைய ஆவியினாலே
______________________________________________
கேள்வி 37
யாரை கட்டினால் பலவானுடைய வீட்டை கொள்ளையிடலாம் ?
விடை : பலவானை
______________________________________________
கேள்வி 38
இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாதது எது ?
விடை : பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசுவது
______________________________________________
கேள்வி 39
எப்படிப்பட்ட மரத்தின் கனி நல்லது ?
விடை : நல்லமரத்தின்
______________________________________________
கேள்வி 40
எதன் நிறைவினால் வாய் பேசும் ?
விடை : இருதயத்தின்
______________________________________________
கேள்வி 41
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவுக்கும் எப்போது கணக்கு ஒப்புவிக்க வேண்டும் ?
விடை : நியாயத்தீர்ப்பு நாளில்
______________________________________________
கேள்வி 42
பெரிய மீனின் வயிற்றில் மூன்று நாள் இரவும் பகலும் இருந்தது யார் ?
விடை : யோனா
______________________________________________
கேள்வி 43
யோனாவின் பிரசங்கத்தை கேட்டு யார் மனம்திரும்பினார் ?
விடை : நினைவே மக்கள்
______________________________________________
கேள்வி 44
சாலமோனுடைய ஞானத்தை கேட்க வந்தது யார் ?
விடை : தென்தேசத்து ராஜஸ்திரி
______________________________________________
கேள்வி 45
ஒரு மனுஷனை விட்டு புறப்படும் அசுத்த ஆவி எங்கு அலைந்து இளைப்பாறுதல் கண்டடையாது ?
விடை : வறண்ட இடங்களில்
______________________________________________
கேள்வி 46
நான் விட்டு வந்த என் வீட்டிற்கு திரும்ப போவேன் என்று கூறுவது யார் ?
விடை : அசுத்த ஆவி
______________________________________________
கேள்வி 47
அசுத்த ஆவி புறப்பட்டு யாரை அழைத்துவரும் ?
விடை : பொல்லாத வேறு ஏழு ஆவிகளை
______________________________________________
கேள்வி 48
இயேசுவின் தாயும் சகோதரரும் அவரிடம் பேச எங்கே நின்றார்கள் ?
விடை : வெளியே
______________________________________________
கேள்வி 49
இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களை என்று இயேசு யாரை சுட்டிக்காட்டினார் ?
விடை : தமது சீடர்களை
______________________________________________
கேள்வி 50
யாருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எனக்கு சகோதரரும் சகோதரியும் என்று இயேசு சொன்னார் ?
விடை : பரலோகத்திலிருக்கிற பிதாவின்
______________________________________________

Comments
Post a Comment