அப்போஸ்தலர்களின் பாடு - மரணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.
பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். (லூக்கா:6:13)
சீடர்கள் அறிமுகம் :-
இயேசுவின் சீடர்கள் சாதாரண மக்கள் என அறியப்பட்டு மக்களோடு மக்களாய் வாழ்ந்துவந்தனர். அவர்களில் சிலர் மீன்பிடித்தொழில் செய்தனர். இயேசு நாதரின் சீடர்கள் பெயரை மத்தேயு நற்செய்தி நூல் 10ஆம் அதிகாரம் 2 முதல் 4 வரை பகுதி சுட்டிக்காட்டுகிறது. இயேசு நாதர் அவர்களை அழைத்தபோது தங்களுக்குரிய அனைத்தையும் விட்டு இயேசுவுக்கு பின் சென்றனர். எனவே இயேசு நாதர் அவர்களுக்கு அப்போஸ்தலர் என பெயர் வழங்கினார்.
சீடர்களின் பணிக்காலம் :-
சீடர்கள் இயேசு நாதரோடு 3 வருங்களுக்கு மேல் சுற்றி நடந்து பல போதனைகளை பெற்றார்கள். இயேசு நாதரின் சிலுவை மரணத்திற்கு பின் தங்களை முழு சாட்சிகளாக முன்நிறுத்தி வாழ்நாள் முழுதும் பணி செய்தனர். இவற்றில் சிலருடைய மரணங்கள் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிலருடைய மரணங்களை வரலாறுகள் வழி அறியமுடிகிறது.
பல நிலையில் கிறிஸ்தவத்திற்கு வடிவம் தந்த அப்போஸ்தலர்களின் மரணம் குறித்து பின் வரும் வீடியோ விளக்குகிறது. வீடியோவை கிளிக் செய்து அப்போஸ்தலர் மரணம் பற்றி அறிந்து கொள்ளவும்.
Comments
Post a Comment